

|
12/20/2008 |
Filed under:
அனுபவம்
|
சமீபத்தில்(இது டோண்டு சாரின் சமீஈஈஈஈபம் அல்ல ...போன மாசம்தான்) திருச்சி மலைக்கோட்டைக்கு சென்றிருந்தேன்.உச்சிப்பிள்ளையார் சன்னதிமுன் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது பெற்றோர்களுடன் 2 குழந்தைகள்(ஒரு பையன்,அவனை விட இளைய பெண் குழந்தை ஒன்று) என்னைக் கடந்து சென்றனர்.தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர்களும் எனக்குப் பின்னால் நின்று நகரின் அழகை ரசிக்க ஆரம்பித்தனர். அந்த பையன் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான்.அவர் அப்பாவும் சலிக்காமல் அவன் சொல்வதை காது கொடுத்து கேட்டு கொண்டிருந்தார்.
பையன் கேட்டான்,"அப்பா,அந்த கோயிலுக்கும் போகலாமா?"
அப்பா:"எந்த கோவிலுக்கு?"
பையன்:(ஸ்ரீரங்கத்தை நோக்கி கை காட்டியபடி)"அதோ அந்த ஊருல இருக்கிற கோயிலுக்கு.அது என்ன ஊருப்பா?"
அப்பா:"ஸ்ரீரங்கம்"
பையன்:"அதுதான் ஸ்ரீரங்கமா?"
அப்பா:"ஆமாம்."
பையன்:(திருவானைக்காவல் கோயிலை நோக்கி)"அங்க இருக்குதே அந்த ஊரு?"
அப்பா:(யோசிக்க அவகாசமே எடுக்காமல்)"ஸ்ரீலங்கா".
பையன்:(ஒரு நிமிடம் விழித்தவன் சுதாரித்துக்கொண்டு)"போப்பா நீ பொய் சொல்ற. பொய்தான சொல்ற?ஸ்ரீலங்கா இங்கிருந்து ரொம்ப்ப்ப்ப தூரம்"
உடனே அந்த பெண் குழந்தை தன்னுடைய அழகான மையிட்ட பெரிய கண்களை விரித்துக்கொண்டு,"நெசமாவாப்பா?அதுதான் ஸ்ரீலங்காவா?" என்று கேட்டாள்.
அவர்களின் வெகுளித்தனத்தையும் அவர்கள் அப்பாவின் timing humor-ம் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.

© 2009 பட்டாம்பூச்சி
0 comments:
Post a Comment