ஆஹாஅவனா-நீயி 12/13/2008

நான் எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.....அவன் என்னோட பேச்ச கேக்கற மாதிரியே தெரியல...எவ்வளவு நேரம்தான் ஒரு மனுசன் காச புடி காச புடின்னு சொல்ல முடியும் சொல்லுங்க.....ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா என்னால முடியல கண்ண கட்டுது........குடுக்கற காச வேணாம்னு சொல்ற முட்டாள் நீயாதான் இருப்படா -னு திட்டிப் பாத்துட்டேன்....எவ்வளவோ பேரு டீ,காபி,முட்ட பப்ஸ் ,ஓசி சாப்பாடு,ஓசி சட்டை, டிரீட்-ங்கற பேருல பர்ஸ்-ஐ பதம் பாத்து பழுக்க வச்சி இருக்காங்க...நீ என்னடான்னா நானே தரேன்னு சொல்றேன் வேணாம்கிறியே...பரவா இல்ல நீ வாய்ல போட்டுக்கோ நான் ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டேனு சொன்னேன்....கொஞ்சம் கூட அசஞ்சு குடுக்க மாட்டேன்னுட்டான்.....என்ன உனக்கு அவ்வளவு பிடிவாதம்?பெரியவங்க எப்பவுமே விட்டு குடுக்கணும்னு சொல்லி இருக்காங்க நான் இவ்வளவு தூரம் கேக்கறதுக்காகவாவது கொஞ்சம் சரின்னு ஒத்துகிட்டா என்னனு அட்வைஸ் பண்ணியும் பாத்தேன்....ம்ம்ம்ம்ம் வாய தெறக்க மாட்டேனுபுட்டானே பாசக்கார பயபுள்ள......இது ஒன்னியும் ஆவற மாதிரி தெரியல.....என்னோட செல்லம்ல சொன்னா நல்ல புள்ளையா கேப்பியாம் அப்படினு கொஞ்சி பாத்தேன்....எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பாத்துட்டு போனாங்க.....சரி இது சரிபடாதுன்னு நமக்குள்ள இருக்குற கைப்புள்ள கண்ணு முழிச்சான்.....சொன்னா கேளு....(வயிறு)வலிக்குது.....அழுதுருவேன்......ப்ளீஸ் அப்படினு கெஞ்சி பாத்தான்....கடசில தான,தண்ட,சாம,பேத அஸ்திரங்களைப் பிரயோகிச்சும் அவன் திருந்தல....எவ்வளவு தூரம் சொன்னாலும் தன்மானத்தோட, பணத்த வாங்கிக்க மாட்றியே...நீ ரொம்ப நல்லவன்பா-னு சொல்லிட்டு வந்துட்டேன் அப்படின்னு நீங்க நெனைக்க கூடாது.....பின்ன என்னங்க எவ்வளவுதான் மனுசனோட பொறுமைய சோதிப்பாய்ங்க?நானும் எவ்வளவு நேரம்தான் வயிறு வலிக்காத நல்லவ மாதிரியே நடிக்கிறது?அவனோட வாய பாத்து நங்குன்னு ஒரு குத்து விட்டுட்டு வந்து கைல பிளாஸ்திரி போட்டதுதான் மிச்சம்.....வாய் எப்படி இருக்குனு பாக்க ஆசையா?ஹ்ம்ம்....தெரியுமே.இப்படி சந்தோசப்படறதுக்குன்னே கொலவெறியோட திரிவிங்களே....உங்களுக்காக படம் புடிச்சாந்தேன்.....அவனோட வாய கீழ இருக்கற படத்துல பாருங்க.....
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`

`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
சரியா தெரியலையா???சரி அடுத்த படத்த பாருங்க.....
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`

`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
அந்த எதிரியோட முழு படத்தையும் கீழ பாருங்க......
`
`
`

`
`
அந்த எதிரி,எங்க அலுவலகத்தில இருக்கற pantry கார்.
உங்களுக்கே இப்படி இருந்தா பசியில கண்ணு கட்டிக்கிட்டு வரும்போது இத நம்பி ஏதாவது சாப்டலாம்னு போயி மண்ட காஞ்ச எனக்கு எப்படி இருந்து இருக்கும்???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
வேற ஒண்ணும் இல்லைங்க ....நேத்து அப்பரைசல் மீட்டிங் வழக்கம்போல எல்லா மீட்டிங் மாதிரியும் லேட்-ஆ ஆரம்பிச்சாய்ங்க.வறுத்து தாளிச்சு முடிய நேரம் ஆகிடுச்சு....அவிங்க நம்மகிட்ட காய்ச்சின கஞ்சிய குடிச்சு முடிச்சு கிர்றடிச்சு வெளிய வந்தா முடிக்க வேண்டிய வேலைகள் வேற நெனப்பு வந்துச்சு...சரி ஏதாவது சிறு தீனி சாப்டுட்டு வேலைய தொடரலாமேன்னு போய் இதுகிட்ட காச திணிச்சு எதையாவது சாப்புடலாம்னு போனால் மிஷின்-ல ஏதோ பிரச்சினை.....காச வாங்க மாட்டேனு இம்சை பண்ணுது......வேற என்ன பண்ண முடியும்?கண்ணால மட்டும் பாத்து பசி ஆறிகிட்டு பசியிலயே வேலைய செஞ்சுட்டு வீட்டுக்கு போனேன்....மேல் பத்தில கண்ண கட்டுதுன்னு ஏன் சொன்னேன்னு இப்ப தெரியுதா :(

ஏய் யப்பா?என்ன கொலைவெறி வருது உங்களுக்கு?நாலு சாத்து சாத்தனும்னு இருந்தா கீழ இருக்கிற ஓட்டு பட்டை மேல ஒரேயொரு ஓட்டு குத்திட்டு போறது?



0 comments:

Post a Comment