முத்தான முத்தல்லவோ....!! - பாகம் 2 12/30/2008

இதன் முந்தைய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.

இனி அதன் தொடர்ச்சியை மேற்கொண்டு படிக்கலாம்.

செயற்கை சிப்பி வளர்த்து முத்து பெரும் முறை பெரும்பான்மையோரால் நம்பப்படுவது போல ஜப்பானியர்கள் கண்டுபிடித்தது அல்ல.வில்லியம் சவில்லி-கென்ட் எனப்படும் ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர் முதலில் இதை கண்டறிந்தவர்.அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த டோகிசி நிஷிகாவா,முறையான பண்ணை வளர்ப்பை அமல்படுத்த மிகிமொடோவின் உதவியை நாடினார்.பின்னாளில் அவர் பெண்ணையும் மணந்தார்.1916-ல் முறையான உரிமம் அவருக்கு தரப்பட்டது.அதை ஜப்பானியர்கள் வியாரபார ரீதியாக பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.எனவே இதன் முன்னோடி வில்லியமே ஆவார்.






உலகின் பிரசித்தி பெற்ற முத்து வெனிசுலா அதிபர் ரோமுலோ,ஜான் கென்னெடி-இன் வருகையின்போது அவர் மனைவி ஜாக்குலின் கென்னெடி-க்கு கொடுத்த நெக்லஸ் ஆகும்.




இந்து மதத்தில் கருட புராணத்தில் "ஒன்பது முத்துக்கள்" என்ற தலைப்பில் முத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.கிறித்துவ மதத்திலும்,"சொர்க்கத்தின் அரசாங்கம் உயர்ந்த மதிப்புடைய முத்தை போன்றது", என்று குறிப்பிடப்படுகிறது.இஸ்லாத்தில்,"சொர்க்கத்தில் வசிப்பவர் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பர்",என்று கூறப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment