முத்தான முத்தல்லவோ....!! - பாகம் 1 12/24/2008

சிப்பிக்குள் இருந்து வருவது முத்து என்பது நம் அனைவருக்கும் தெரியும்.முத்தானது அதன் இருப்பிடத்தில் இருந்து அணிகலனாக நம்மிடம் எப்படி வந்து சேர்கிறது என்று தெரியுமா?

அதற்கு முன் முத்தைப் பற்றி சில தகவல்கள் .

பொதுவாக முத்துக்கள் இருக்கும் உயிருள்ள சிப்பிகளின்(mollusk குடும்பைத்தை சேர்ந்த Oysters மற்றும் Mussels) இருப்பிடம் உப்பு நீர்(கடல்) மற்றும் நன்னீர்(ஏறி,ஆறு,குளம் போன்றவை).சில நேரம் சாப்பிடவோ மூச்சு விடவோ அதன் துவாரங்கள் திறந்து இருக்கும்போது இந்த வகையான வெளிப்புற இடைஞ்சல்கள் அதன் உடம்பினுள்ளே புகுந்து விடுவதுண்டு.தன்னை தாக்க வரும் ஒட்டுண்ணி மற்றும் தூசி போன்ற பொருட்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள அவைகளை சுற்றி பிசின் போன்ற பொருள் மூலம் அதை மூடி விடுகிறது.அதன் மீது கால்சியம் கார்பநேட் என்ற படிமனை அடுக்கடுக்காக படியும்போது அது முத்தாக உருவாகிறது.முத்துக்கள் அதன் உருவ அமைப்பை பொறுத்து எட்டு வகைகளாக பிரிக்கலாம்:round,வெள்ளை-round,button, drop, pear, oval, baroque மற்றும் circled.ஒரு முத்து எடுக்க பல ஆயிரம் சிப்பிகளை கொல்ல வேண்டி இருக்கலாம்.சரியாக சொல்ல வேண்டுமானால் 3 டன் சிப்பிகளில் 3 அல்லது 4 மட்டுமே முத்து உருவாக்கக்கூடிய வாய்ப்பு பெற்றிருக்கும்.

முத்துக்கள் வெள்ளை நிற சிப்பிகளிலேயே கிடைக்கின்றன. கிடைக்கும் முத்துக்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதில்லை.கறுப்பு,மஞ்சள்,பழுப்பு,பச்சை என்று பல வண்ணங்களில் கிடைக்கின்றன.கறுப்பு சிப்பிகள் 99%, முத்துக்களை உருவாக்குவதில்லை.வெள்ளை சிப்பிகள் வெகு அபூர்வமாக கறுப்பு முத்துக்களை உருவாக்குகின்றன.அதனால் கறுப்பு முத்துகளின் மதிப்பானது பல மடங்கு உயர்வானது(இனிமே யாரும் நாம கறுப்பா பிறந்துட்டமேன்னு வருத்தப்படாதீங்கப்பு).


முத்தின் பிரதிபலிக்கும் தன்மையை வைத்து அதன் மதிப்பு கணக்கிடப்படும்.அதிக பளபளப்பான,பிரதிபலிக்கும் தன்மையுடைய முத்துக்களின் விலை அதிகம்.X-ரே மூலம் தற்போது அவைகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.இயற்கையாக முத்துக்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டது இந்திய பெருங்கடல் பகுதியில்தான்.தற்பொழுது பஹ்ரைன் கடல் பகுதியில்தான் இயற்கையான முத்துக்கள் கிடைக்கிறது.கடலில் மூழ்கி முத்தெடுக்க உதவும் கப்பல்களை நிறைய தன்வசம் வைத்துள்ளது ஆஸ்திரேலியா.ஆஸ்திரேலியா நாட்டை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலில் முத்துக்கள் இன்னும் அவர்களால் எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

முத்துக்கள் இரண்டு வகை.இயற்கை மற்றும் செயற்கை(இமிடேசன் அல்ல,பண்ணையில் வைத்து,மனித முயற்சியால்,சிப்பிகளை வளர்த்துவது.இமிடேசன் வகையறாக்கள் இந்த முறை மூலம் உருவாக்கப்படுவதில்லை).சூழலும், விளையும் விதமும் இயற்கையாக இருந்தாலும் மனித முயற்சி நடுவே தேவைப்படுவதால் செயற்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.இரண்டின் குறுக்கு வெட்டு படம்(Cross-Section diagram) கீழே.


இமிடேசன் வகை முத்துக்கள், சிப்பியின் சுவரை ஒட்டி உள்ளே இருக்கும் பிசுபிசுப்பான பொருள் அல்லது கோரல் எனப்படும் பவளப்பாறைகள் அல்லது Conch(வலம்புரி,இடம்புரி சங்குகள் உருவாவது இதில் இருந்தே!) எனப்படும் உயிரினங்களில் இருந்தும் பெறப்படும் மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.கண்ணாடியின் மீது மீன் செதில்களால் ஆன திரவத்தை பூசியும் மற்றொரு வகை தயாரிக்கப்படுகிறது.




ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன்னார் வளைகுடா,சிகப்பு கடல்,பெர்சியன் வளைகுடா போன்றவற்றை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலில் இருந்தே பெரும்பாலான முத்துக்கள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.மூழ்கி முத்தெடுப்பதில் சீனர்கள் வல்லவர்களாக இருந்திருக்கின்றனர்.ஸ்பானிஷ் மக்களும் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். பிறகு ஜப்பானியர்கள் அதில் நீண்ட காலமாக முன்னனியில் இருந்தனர்.ஆனால் தற்காலத்தில் சீனர்களே முந்தியுள்ளனர்.ஜப்பான் அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்து பதப்படுத்தி பளபளப்பாக்கி ஜப்பான் லேபல் ஒட்டி அமோகமாக விற்று வருகின்றனர்.






மீதி அடுத்த பதிவில்..........



0 comments:

Post a Comment