FollowersSubscribeவலைப்பதிவு காப்பகம்என்னைப் பற்றிLive Traffic Feedவந்தார்கள் சென்றார்கள்.. |
|
|
3/24/2009 |
பெங்களூரில் பெட்ரோல் பங்கில் இன்று ஒரு அறிவிப்பை பார்த்தேன். வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்பிக்கொள்ள சொல்லி வெளியிடப்பட்டிருந்தது.எப்போதும் போனவுடன் பெட்ரோல் போட்டுவிட்டு அதே வேகத்தில் 2 ரூபாய் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பி கெளம்பி போய்க்கிட்டே இருப்போம்.இதில் இந்த நைட்ரஜன் வாயு வகையறா எப்படி விசேஷமானது?இதை அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டேன்.ரொம்ப நாட்கள் காற்று குறையாமல் சக்கரத்தில் தங்கி இருக்கும் என்றும் அவ்வளவு சீக்கிரம் பஞ்சரே ஆகாது என்றும் கூறினார்.நம்பும்படியாக இல்லை.உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன்.
மறந்து விட்டேனே...முதல் முறை காற்று நிரப்பும்போது ஓவ்வொரு சக்கரத்திற்கும் ஆகும் செலவு 30 ரூபாய்.அதன் பின் ஒவ்வொரு மறுநிரப்பலுக்கும் 10 ரூபாய்.நேப்ட்யுன் என்றொரு நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்திருந்தது.
|
|
3/05/2009 |
|
Filed under:
பொது
|
|
பெங்களூரில் இருக்கும் இடம் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகும் வழித்தடம் மற்றும் அதன் தூரம் அறிய வேண்டுமானால் பின்வரும் தளத்தை உபயோகித்து கொள்ளலாம்.
வழித்தடம் கானொளியுடன் கிடைப்பது இன்னும் விசேடமானது.அதாவது செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை காணொளி மூலமே வழிநடத்தி செல்கின்றது இந்த தளம்.இதனால் சில முக்கியமான லேண்ட்மார்க்-ஐ தவறவிடாமல் நேரில் செல்லும்போது நினைவு வைத்துக்கொண்டு செல்ல வசதியாக இருக்கும்.
தளத்தின் முகவரி: www.vidteq.com
தற்போது பெங்களூருக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
|
|
2/19/2009 |
|
Filed under:
பொது
|
|
நாம் சந்தைப்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களை எவ்வளவு தூரம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சியை கவனியுங்கள்.
கோகோ-கோலாவில் இருந்து வணிக விசயமாக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட விற்பனை பிரதிநிதி தனது குறிக்கோளை நிறைவேற்ற முடியாது ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறார்.அவருக்கு கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கில் அவர் இப்படி ஒரு தோல்வியை கண்டது இல்லை.பெரும்பாலும் அவரது இலக்கை முடித்த வெற்றியாளராகவே அவர் அறியப்பட்டிருந்தார்.
அவரது சக பணியாளர்,ஏன் அவரால் அரபு நாடுகளில் சந்தைப்படுத்த முடியாமல் போனது என்று அக்கறையுடன் விசாரிக்கிறார்.
அதற்கு அவரின் பதிலை படியுங்கள்:"என்னை முதலில் அரபு நாட்டிற்க்கு அனுப்பியபோது நிச்சயம் இலக்கை சர்வ நிச்சயமாக எட்டி விடுவேன் என்ற பெரும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன்.ஏனெனில் அங்கு அப்போது வரை கோகோ-கோலாவைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.ஆனால் அரபு மொழி தெரியாத காரணத்தால் என்னால் அவர்களிடம் என்னுடைய கருத்துகளை விரும்பியபடி சென்றடைய செய்ய முடியவில்லை.இந்த பிரச்சினையை சமாளித்து நான் சொல்ல வருவதை அவர்களுக்கு புரிய வைக்க மூன்று சுவரொட்டிகளை தயாரித்தேன்.
முதலாவது:ஒரு மனிதன் தாகத்தால் பாலைவனத்தின் சுடுமணலில் மயங்கி கிடப்பதுபோல.
இரண்டாவது:அந்த மனிதன் நமது கோகோ-கோலாவை அருந்துவது போல.
மூன்றாவது:அந்த நபர் உற்சாகத்துடன் புது தெம்போடு ஓடுவதை போல.
பிறகு அந்த சுவரொட்டிகளை அனைத்து இடங்களிலும் ஒட்ட செய்தேன்.
நண்பர் குழப்பத்துடன் இடைமறிக்கிறார்:"இந்த ஐடியா வேலையை இலகுவாக்கி இருக்க வேண்டுமே?"
விற்பனை பிரதிநிதி:"ஆகி இருக்கும்.ஆனால் அரேபியர்கள் வலமிருந்து இடமாக படிப்பவர்கள் என்பதை நான் நினைவில் கொள்ள மறந்து விட்டிருந்தேன்."
இது எப்படி இருக்கு?
|
|
2/18/2009 |
|
|
|
பார்க்கும் நமக்கே குலை நடுங்குகிறது. எப்படித்தான் ஒட்டுகிறார்களோ தெரியலப்பா. எவ்வளவு கடுமையாக மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை மேற்கொண்டிருப்பார்கள் இல்லையா? எதை எதையோ வாழ்வில் கஷ்டம் என்று சொல்லிக்கொண்டு திரியும் நமக்கெல்லாம் இது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இந்த அறிமுகம் இல்லா சகோதரர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.
|
|
12/30/2008 |
|
|
|
இதன் முந்தைய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.
இனி அதன் தொடர்ச்சியை மேற்கொண்டு படிக்கலாம்.
செயற்கை சிப்பி வளர்த்து முத்து பெரும் முறை பெரும்பான்மையோரால் நம்பப்படுவது போல ஜப்பானியர்கள் கண்டுபிடித்தது அல்ல.வில்லியம் சவில்லி-கென்ட் எனப்படும் ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர் முதலில் இதை கண்டறிந்தவர்.அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்த டோகிசி நிஷிகாவா,முறையான பண்ணை வளர்ப்பை அமல்படுத்த மிகிமொடோவின் உதவியை நாடினார்.பின்னாளில் அவர் பெண்ணையும் மணந்தார்.1916-ல் முறையான உரிமம் அவருக்கு தரப்பட்டது.அதை ஜப்பானியர்கள் வியாரபார ரீதியாக பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.எனவே இதன் முன்னோடி வில்லியமே ஆவார்.
உலகின் பிரசித்தி பெற்ற முத்து வெனிசுலா அதிபர் ரோமுலோ,ஜான் கென்னெடி-இன் வருகையின்போது அவர் மனைவி ஜாக்குலின் கென்னெடி-க்கு கொடுத்த நெக்லஸ் ஆகும்.
இந்து மதத்தில் கருட புராணத்தில் "ஒன்பது முத்துக்கள்" என்ற தலைப்பில் முத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.கிறித்துவ மதத்திலும்,"சொர்க்கத்தின் அரசாங்கம் உயர்ந்த மதிப்புடைய முத்தை போன்றது", என்று குறிப்பிடப்படுகிறது.இஸ்லாத்தில்,"சொர்க்கத்தில் வசிப்பவர் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பர்",என்று கூறப்பட்டுள்ளது.
© 2009 பட்டாம்பூச்சி




































